22nd February 2024 11:38:55 Hours
இலங்கை இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதியுமான, மேஜர் ஜெனரல் ஐஎச்எம்ஆர்கே ஹேரத் யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2024 பெப்ரவரி 20 அன்று 5 வது இலங்கை சமிக்ஞை படையணிக்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த படைத் தளபதியை கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்பீ கால்லகே யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். அதைத் தொடர்ந்து, 5 வது இலங்கை சமிக்ஞை படையணியின் படையினரால் இராணுவ சம்பிரதாயத்திற்கு இணங்க பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மரக்கன்று நடுதல் மற்றும் குழு படம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் அன்றைய நிகழ்ச்சி ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம் படையினருக்கான உரை போன்றவையும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, கட்டளை அதிகாரி படைத் தளபதிக்கு தகவல் தொடர்பு உட்கட்டமைப்பு, நிர்வாக மற்றும் வழங்கல் விடயங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
படைத் தளபதி முகாமை சுற்றி பார்வையிட்டதுடன் அதிகாரிகளுடன் இணைந்து அதிகாரிகளின் உணவகத்தில் மதிய உணவில் கலந்துகொண்டார். அவர் புறப்படுவதற்கு முன், அவரின் வருகைக்கான விருந்தோம்பல் மற்றும் தொழில்முறையை அங்கீகரித்து, விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களைப் பதிவு செய்தார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.