12th February 2024 11:25:50 Hours
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் புதன்கிழமை (07 பெப்ரவரி 2024) தியத்தலாவ 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம் செய்தார்.
மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் தியத்தலாவை கிரியேட்டர்ஸ் புத்தக நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டதுடன், 17 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார். தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் இராணுவ மரபுகளுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், தொடர்ந்து 17 வது பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஈஏடிபீ எதிரிசிங்க எல்எஸ்சி அவர்களினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
தொடர்ந்து, படையணியின் கடமைகள், பொறுப்புகள் மற்றும் சமீபத்திய சாதனைகள் பற்றிய விரிவான விளக்கத்தை கட்டளை அதிகாரி வழங்கினார். பின்னர் படையணியின் படைத்தளபதி குழு படம் எடுத்துக்கொண்டதுடன், படையினருக்கான உரையில் அவர்களின் சேவைக்கு பாராட்டு மற்றும் நன்றியையும் தெரிவித்தார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்து அனைவருக்கும் தளபதியுடன் கலந்துரையாடும் வாய்ப்பை கொடுத்தது. பின்னர் முகாம் வளாகத்தை பார்வையிட்டதுடன் தளபதி படையணியின் நலத்திட்டங்களை ஆய்வு செய்தார்.
அவரது வருகையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், படையணியின் படைத் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடிஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.