Header

Sri Lanka Army

Defender of the Nation

11th February 2024 20:53:12 Hours

4 வது கெமுனு ஹேவா படையணியினால் செங்கலடியில் புதிய வீடு

4 வது கெமுனு ஹேவா படையணி படையினரால், செங்கலடி, ஏராவூர்பற்று, பெரியபிள்ளைமலையில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் 2024 பெப்ரவரி 5 ஆம் திகதி நாட்டப்பட்டது. இத்திட்டம் தேவையுடையவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சீரான தங்குமிடமின்றி வசிக்கும் திரு. அகலன் சிறிபாலன் அவர்களின் குடும்பத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் திரு. இளையதம்பி குமார நிஷாந்தன் அவர்களின் நிதியுதவியினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

4 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியினால் இத்திட்டம் சரியான நேரத்தில் முடிப்பதற்கான மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிள்றன.