Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2024 19:26:38 Hours

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் கள விஜயம்

புதிய யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 பெப்ரவரி முதலாம் திகதியன்று யாழ். மாவட்டச் செயலாளர் திரு. ஏ. சிவபாலசுந்தரன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

மாவட்டச் செயலாளர் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு 700க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிப்பதில் இராணுவத்தினால் வழங்கப்பட்ட உதவிக்கு நன்றி தெரிவித்த்துடன், எதிர்கால அத்தியாவசியத் தேவைகளுக்கு இராணுவ ஆதரவைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். பிரதேசத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் பிரச்சினைகளைத் தடுப்பதில் இராணுவம் வழங்கிய ஒத்துழைப்பிற்காக மாவட்டச் செயலாளர் பாராட்டினார். விஜயத்தின் முடிவில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மாவட்டச் செயலாளருக்கு விசேட சின்னத்தை வழங்கினார்.

அதே நாளில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி வண. ஸ்ரீ நாகவிஹாரை பிரதம தேரர் மீகஹஜந்துர ஸ்ரீ விமல தேர்ரை சந்தித்துடன், 2024 ஜனவரி 02 திகதியன்று, யாழ். ஆயர் வண. ஜஸ்டின் பெர்னார்ட் ஞானப்பிரகாசம் அவர்களின் அழைப்பின் பேரில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, பிராந்தியத்தின் தற்போதைய நிலைமையை மதிப்பிடுவதற்காக ஆயர் மாளிகையில் அவருடன் கலந்துரையாடினார்.

51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த விஜயத்தில் பங்குக் கொண்டனர்.