Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2024 19:16:49 Hours

யாழ். தளபதி 55 வது காலாட் படைப்பிரிவு படையினரை சந்திப்பு

புதிய யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 2024 ஜனவரி 29 மற்றும் 30 திகதிகளில் 55 வது காலாட் படைப்பிரிவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த தளபதியை 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்த்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மரியாதையுடன் வரவேற்றார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவரது விஜயத்தின் போது, 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மரக்கன்று நடுதல், படையினருக்கான உரை, குழுப்படம் மற்றும் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரம் என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

இந்த விஜயத்துடன் தளபதி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேட்கள், படையலகுகள், முழங்காவில் படையலகு பயிற்சி பாடசாலை, மாவட்ட செயலக அலுவலகம், கிளிநொச்சி வெற்றி நினைவுச்சின்னம், கிளிநொச்சி புனித தெரேசா தேவாலயம், கிளிநொச்சி கந்தசாமிகோயில், கிளிநொச்சி லும்பினி விகாரை, மற்றும் ஆனையிறவு காமினி குலரத்ன நினைவு நினைவுத்தூபி ஆகியவற்றிற்கும் விஜயம் செய்தார்.

இந்த நிகழ்வுகளில் 55 வது காலாட் படைப்பிரிவில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.