Header

Sri Lanka Army

Defender of the Nation

01st February 2024 19:10:10 Hours

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலில் இராணுவத் தளபதிக்கு இரவு விருந்து

2024 ஜனவரி 31 ம் திகதி கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான சைப் இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு இரவு விருந்தில் இராணுவத் தளபதி லெப்டின்ன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். இந்த அழைப்பை பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் திரு. வாஜித் ஹசன் ஹஷ்மி மற்றும் கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் முஹம்மது அலி ஆகியோர் வழங்கினர்.

பதில் உயர் ஸ்தானிகர் மற்றும் கட்டளை அதிகாரி ஆகியோர் இராணுவத் தளபதியை கப்பலுக்கு அன்புடன் வரவேற்றனர். இந் நிகழ்வில் இராணுவத் தளபதி மற்றும் கலந்து கொண்ட ஏனைய பிரமுகர்களுக்கு இடையில் சுமுகமான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, துறைமுக, கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ. நிமல்சிறிபால டி சில்வா, , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ மற்றும் பல சிறப்பு அழைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.