25th January 2024 18:26:08 Hours
543 வது காலாட் பிரிகேட் படையணியின் 13 வது ஆண்டு நிறைவினை 543 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிவை நாணயக்கார ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத சடங்குகள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுடன் சனிக்கிழமை (ஜனவரி 20) கொண்டாடியது.
படையினர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) போதி பூஜையை நடாத்தியதுடன், ஆண்டு நிறைவு நாளில், தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதையினை வழங்கினர். படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்ட அனைத்து நிலையினருடனான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.