Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd January 2024 22:28:36 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு அதிகார சின்னம் வழங்கல்

இராணுவத்தில் அண்மையில் நிலை உயர்வு பெற்ற ஐந்து மேஜர் ஜெனரல்கள் குழு இன்று (ஜனவரி 02) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை உத்தியோகபூர்வ சந்தித்து அவரிடம் இருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதித் தளபதியான இலங்கை சமிக்ஞை படையணியின் மேஜர் ஜெனரல் ஏபீ விக்ரமசேகர யுஎஸ்பீ பீஎஸ்சீ, போக்குவரத்து பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூ எல்ஏசீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, பாதீடு மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமான இலங்கை பொது சேவை படையணியின் மேஜர் ஜெனரல் ஏஎம்கேஜீபீஎஸ்கே அபேசிங்க, இலங்கை சமாதான ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, காலாட் படை பயிற்சி நிலைய தளபதி கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்எஸ்பீ ஆகியோர் இராணுவ தளபதியின் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமைப்பின் முன்னேற்றத்திற்காக வியர்வை சிந்திய புதிய நிலை உயரவு பெற்ற அதிகாரிகளுக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சுமுகமான உரையாடலுக்குப் பிறகு, இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு நட்சத்திர ஜெனரலுக்கான அதிகார வாளினை வழங்கினார். இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், நிகழ்வின் ஞாபகமாக படங்கள் எடுத்துக்கொண்டனர்.