21st December 2023 23:03:36 Hours
திருகோணமலை இராணுவ வளங்கல் கல்லூரியின் புதிய தளபதியாக கேணல் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சி பீடீஎஸ்சீ அவர்கள் 8 டிசம்பர் 2023 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இராணுவ வளங்கல் கல்லூரியின் தலைமைய பயிற்றுவிப்பாளர் கேணல் ஜிடீஎஸ் சில்வா யூஎஸ்பீ கியூஎல்சிஒ எல்எஸ்சிஏடீ அவர்கள் அன்புடன் தளபதியை வரவேற்றதுடன் தொடர்ந்து நுழைவாயில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. மத வழிபாடுகளுக்கு மத்தியில் தளபதி தனது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.பின்னர் புதிய தளபதி பணியாளர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டார்.
பதவியேற்பு விழாவைக் குறிக்கும் வகையில் தளபதி, முகாம் வளாகத்தில் மாங் கன்றினை நட்டதுடன் படையினருக்கு உரையாற்றினார். அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்துடன் விழா நிறைவுற்றது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் புதிய தளபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.