16th December 2023 09:30:51 Hours
14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேடின் 16 வது கஜபா படையணியின் படையினரின் ஒருங்கிணைப்பில் புதன்கிழமை (டிசம்பர் 13) கருவலகஸ்வெவ மைலாங்குளம் ரன்முத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியின் வேண்டுகோளின் பேரில் திரு.திஷன் ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய ரூ. 180,000/=. பெறுமதியுடைய எழுதுபொருட்கள் மற்றும் கற்பித்தல் பொருட்களை பதினெட்டு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.
143 வது காலாட் பிரிகேட் தளபதி, 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் பிரதம அதிதிகளாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பாலர் பாடசாலை மாணவன் நிகழ்த்திய உரையில் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தான்.