16th December 2023 08:00:51 Hours
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட் படையினர் வன்னிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் தென்னம் பயிர்ச் செய்கைக்கு தமது பங்களிப்பை வழங்கியதுடன், மன்னார் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களுக்கு 800 தென்னம் பிள்ளைகளை 11 டிசம்பர் 2023 அன்று வழங்கினர்.
வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மற்றும் தென்னை பயிர்ச் செய்கை சபையின் முயற்சிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பயனாளிகள் இலவசமாக தென்னம் பிள்ளைகளை பெற்றுக் கொண்டனர். 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது (தொ) இயந்திரவியல் காலாட் படையணியின் படையினர் இத்திட்டத்தை ஒருங்கிணைத்து முன்னெடுத்தனர்.
வடக்கு மாகாணத்தின் உத்தேச 'இரண்டாம் தெங்கு முக்கோணத்தை' பல வாரங்களுக்கு முன்னர் திறந்து வைத்ததன் பின்னர் அதனை உருவாக்குவதற்கு வன்னிப் படையினரும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.