Header

Sri Lanka Army

Defender of the Nation

10th December 2023 18:55:42 Hours

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர் நுவரெலியா - அவிசாவளை வீதியில் சிரமதானம்

நுவரெலியா - அவிசாவளை பிரதான வீதி தியகல பிரதேசத்தில் டிசம்பர் 7 ஆம் திகதி ஏற்பட்ட மண் சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் மண் மேடுகளை அகற்றினர்.

இதன்படி, படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் இணைந்து சில மணித்தியாலங்களுக்குள் மண் மேடுகளை அகற்றி வீதியின் போக்குவரத்தை சீரமைத்தனர். .