30th November 2023 09:42:57 Hours
74 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு 553 வது காலாட் பிரிகேட்டில் அண்மையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிநவீன விரிவுரை மண்டபம் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தலைமையில் 2023 நவம்பர் 23 ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இந்த மண்டபத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2023 ஒக்டோபர் 14 அன்று இடம் பெற்றது.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமன்பெரேரா ஆர்எஸ்பீ ஆகியோர் இத் திட்டத்திற்கு ஒருங்கிணைப்பு வழங்கினர்.
இந்த விரிவுரை மண்டபத்தை நிர்மாணிப்பது ஒரு கூட்டு முயற்சியாகவும், பிரிகேட்டின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு என்பது குறிப்பிடதக்கதாகும்.