Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2023 09:51:34 Hours

ஓய்வு பெறும் பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹ அவர்களுக்கு கொமாண்டோ படையினரால் கெளரவிப்பு

சேவையிலிருந்து ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு நவம்பர் 25 அன்று கணேமுல்ல கொமாண்டோ படையணி தலைமையகத்தில் கௌரவிப்பு மரியாதை வழங்கப்பட்டது.

சம்பிரதாய நிகழ்வுகளுக்கமைய கொமாண்டோ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பிஎம்எஸ்கேகே தர்மவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், அவர் கொமாண்டோ போர் வீரர் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தினார் பின்னர் அனைத்து அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து கொமாண்டோ அதிகாரிகள் மற்றும் பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.

அவர் தனது உரையின் போது, அனைத்து கொமாண்டோக்களும் பணியின் போது கொமாண்டோ கலாசாரத்தைப் பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், அவர் தனது 33 ஆண்டுகால இராணுவ சேவையின் குறிப்பிடத்தக்க பகுதிகளை விரிவாக எடுத்துரைத்தார், அனைத்து வீரர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் அவரது இராணுவ வாழ்க்கையில் அவருக்கு ஆதரவு வழங்கியதையும் நினைவு படுத்தினார்.

முடிவில், பிரிகேடியர் ஜேஎம்எஸ்ஜிபி ஜயமஹ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு கொமாண்டோ படையணியினரால் அவரின் சேவையை பாராட்டி நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொமாண்டோ கிளப் ஹவுஸ் வளாகம் மற்றும் அதிகாரிகள் உணவகத்தின் அதிதிகள் பதிவேட்டில் தனது கருத்துக்களை பதிவிட்டார். பின்னர் வெளிச்செல்லும் சிரேஷ்ட அதிகாரிக்கு கொமாண்டோக்களின் கடைசி வணக்கம் நுழைவாயில் வரை இடம்பெற்றது.

கொமாண்டோ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் கேவிஐஎல் ஜயவீர யுஎஸ்பீ,கொமாண்டோ பிரிகேட் தளபதி, பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட மற்றும் ஏனைய அதிகாரிகள் மற்றும் அனைத்து கொமாண்டோக்களும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.