30th November 2023 10:00:13 Hours
இராணுவப் பயிற்சியான 9 வது 'மித்ர சக்தி-2023' இந்தியா மற்றும் இலங்கை படையினரின் பங்கேற்புடன் புனேவில் உள்ள அவுந்த் நகரில் திங்கட்கிழமை (நவம்பர் 28) நிறைவடைந்தது.
இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஜி.பீ.எஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இறுதிப் பயிற்சியின் முடிவில், 'அமன் ரணசூரய' நுட்பங்கள் மற்றும் தந்திரோபாயங்களை வெளிப்படுத்தப்பட்டது.
இந்திய இராணுவத்தின் 120 படையினர், இலங்கை இராணுவத்தின் 123 படையினர், இந்திய விமானப்படையின் 15 படையினர், இலங்கை விமானப்படையின் 05 படையினர் இணைந்த கூட்டு இராணுவப் பயிற்சியான 9 வது 'மித்ர சக்தி-2023' புனேவில் உள்ள அவுந்த் நகரில் (நவம்பர் 16) ஆரம்பமானது.
‘மித்ர சக்தி’ என்ற பயிற்சியானது 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவமும் இந்திய இராணுவமும் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் கூட்டுப் பயிற்சியாகும்.