27th September 2023 21:19:47 Hours
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் புனித் சுசில் அவர்கள் செவ்வாய்க்கிழமை (செப். 26) யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமான விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வருகை தந்த இராஜதந்திரி லெப்டினன் கேணல் புனித் சுசில் அவர்களை வரவேற்றதுடன் சுமுகமான உரையாடலையும் மேற்கொண்டதுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் எண்ணங்களை பதிவிடுவதற்கு முன்னர் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பின்னர் லெப்டினன் கேணல் புனித் சுஷில் அவர்கள் இந்திய அமைதி காக்கும் நினைவுத் தூபியில் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தினார்.