26th September 2023 22:07:01 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 22) நடைபெற்ற இறுதி நிர்வாக ஆய்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் கலந்து கொண்டார்.
வருகை தந்த இராணுவ பதவி நிலை பிரதானயை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்வீஎம்என்டிகேபி நியன்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நுழைவாயிலில் மரியதையாக வரவேற்றார்.
நிர்வாக ஆய்வின் இறுதி அறிக்கையில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
கலந்துரையாடலின் முடிவில், இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டதுடன், அவர் புறப்படுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக்களை எழுதினார்.
11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் டீஎம்பீபீ தசநாயக்க, 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.