Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd September 2023 09:14:55 Hours

இராணுவ பொலிஸ் படையணியின் வர்ண இரவு 2023'

இராணுவ பொலிஸ் படையணியின் வர்ண இரவில் சர்வதேச, தேசிய, பாதுகாப்பு சேவைகள் மற்றும் படையணிகளுக்கிடையேயான விளையாட்டு மற்றும் தடகள நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட இராணுவ பொலிஸ் படையணியின் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு கௌரவம் மற்றும் அங்கீகாரம் அளித்து பாராட்டப்பட்டது. இந் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (செப். 01) மாலை வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இந் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் 2012 - 2023 ஆண்டுகளில் சிறந்த சாதனைகளைப் பெற்று இலங்கை இராணுவம் மற்றும் நாட்டிற்குப் புகழைப் பெற்றுத்தந்த 22 விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்திய 210 இராணுவ பொலிஸ் படையணியின் விளையாட்டு வீரர்களில் தெரிவு செய்யப்பட்ட குழுவிலிருந்து 37 இராணுவ பொலிஸ் படையணி விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு அடையாளமாக வர்ணங்கள் வழங்கப்பட்டன.

இராணுவத்தின் பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பிரதி பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் சீடி ரணசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ, இலங்கை இராணுவத்தின் ஒழுக்க பாதுகாப்பு பணிப்பாளரும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி, ஆகியோர் பொல்ஹெங்கொட வெகுஜன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்திற்கு வருகை தந்த பிரதம அதிதிக்கு அன்பான வரவேற்பை வழங்கினர்.

மங்கள விலக்கு ஏற்றி, படையணியின் கீதம் இசைக்கப்பட்டு, அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, படையணியின் பெருமைமிக்க வரலாறு, அதன் விரிவாக்கம், படையணியின் முன்னேற்றம், படைவீரர்களின் செயல்பாடுகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் வர்ணங்கள் ஆகியவற்றை விவரிக்கும் வீடியோ ஆவணப்படம் திரையிடப்பட்டது.

மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் பரிசளிப்பு விழா ஆரம்பமாகும் முன்னர் வரவேற்பு உரையை நிகழ்த்தியதுடன், நிகழ்வின் நோக்கம் குறித்து கூட்டத்திற்கு விளக்கினார்.

இராணுவத் தளபதி, இராணுவ பதவி நிலைப்பிரதானி, இராணுவப் பிரதி பதவி நிலைப்பிரதானி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி ஆகியோர் இணைந்து வண்ணமயமான அழகியல் அம்சங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்காக சாதனையாளர்களுக்கு வர்ணங்களை வழங்கினர். இராணுவ கலாசார குழு உறுப்பினர்களால் இந்நிகழ்ச்சி வண்ணமயமாக்கப்பட்டது.

இராணுவத் தளபதி அவர்கள் பரிசளிப்பு விழாவின் இறுதியில் ஆற்றிய உரையில் சாதனையாளர்களை வாழ்த்தியதுடன், அதே நேரத்தில் படையணிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவர்களை ஊக்குவித்தார். இந்நிகழ்ச்சியில் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவ பொலிஸ் படையணியின் படையினருக்கு விளையாட்டு மற்றும் தடகளத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக இராணுவத் தளபதி ஊக்குவிப்பின் அடையாளமாக 1 மில்லியன் ரூபா பண ஊக்கத்தொகையை அன்பளிப்பாக வழங்கியதுடன், அதனை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதி இராணுவத் தளபதியிடமிருந்து நன்றியுடன் பெற்றுக்கொண்டார்.

இராணுவ பொலிஸ் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எச்எம்எஸ்ஐ செனரத் அவர்கள் ஆற்றிய நன்றியுரை அன்றைய நிகழ்வுகளின் இருதி அம்சமாகும்.

உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்கப் படையணியின்படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வைக் கண்டுகளித்தனர்.