23rd July 2023 16:30:52 Hours
யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியாக பதவியேற்றதன் பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையலகுகளுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
ஜூலை 19 அன்று மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 7,10,11,17 மற்றும் 9 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையலகுகளுக்கு விஜயம் செய்தார். வருகை தந்த படையணி படைத்தளபதிக்கு அவர்களின் தற்போதைய வகிபங்கு மற்றும் பணிகள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்குவதற்கு முன், அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள் தங்கள் படையணி படைத்தளபதியினை அன்புடன் வரவேற்றனர்.
மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஒவ்வொரு படையணியிலும் படையினருக்கு உத்தியோகபூர்வமாக உரையாற்றியதுடன், ஒவ்வொரு முகாம் வளாகத்திற்கும் முறையான விஜயத்தின் போது படையினருடன் சுமுகமான உரையாடலையும் மேற்கொண்டார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகளும் இவ் விஜயத்துடன் இணைந்திருந்தனர்.