23rd July 2023 16:35:25 Hours
அனுராதபுரம் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூ பீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களுக்கு 21 வது காலாட் படைபிரிவானது ஜூலை 18 அன்று இராணுவ மரியாதையுடன் பிரியாவிடை வழங்கப்பட்டது.
நுழைவாயிலில் வெளியேறும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையினை மதிப்பாய்வு செய்வதற்கு தளபதி அழைக்கப்பட்டார். பின்னர் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பணிநிலை அதிகாரிகள் மற்றும் பிரிகேட் தளபதிகள் முன்னிலையில் அவரது அலுவலகத்தில் முறையான ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தில் குழுப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
21 வது காலாட்படைப் பிரிவின் தளபதி பின்னர் படையினருக்கு உரையாற்றியதுடன் அங்கு அவர் அந்தந்த அமைப்புகளில் பணியாற்றும் அனைத்து நிலையினரும் உயர் தர நிபுணத்துவத்தைப் பேணுவதற்கும், அப்பகுதியில் அமைதியான சூழலை நிலைநிறுத்துவதற்காக வழங்கிய சேவைகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
வழமையான அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துசாரத்திற்கு பின்னர் 211 வது காலாட் பிரிகேட் தளபதி வெளியேறும் படைப்பிரிவு தளபதிக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.
வெளியேறும் தளபதி வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.