Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd July 2023 19:22:37 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் புதிய தளபதி பதவியேற்பு

வவுனியாவில் உள்ள வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் வன்னி பாதுகாப்பு படை தலைமையகதத்தின் புதிய தளபதியாக இலங்கை சிங்க படையணியின் மேஜர் ஜெனரல் டப்ளியூ பீ ஏ டி டப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் புதன்கிழமை (ஜூலை 19) பதவியேற்றார்.

வருகை தந்த புதிய தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை தொடர்ந்து அன்றைய நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கேஎச்என்பீ ஹன்னதிகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் 7 வது இலங்கை சிங்க படையணி படையினரால் கௌரவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து சமய சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில், மகா சங்க உறுப்பினர்களின் 'செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் டப்ளியூ பீ ஏ டி டப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் தனது புதிய பதவியை ஏற்றுகொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

அதன் பின்னர், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் அன்றைய தினத்தின் நினைவாக தலைமையக வளாகத்தில் மரக்கன்று நடும் முன் சில குழு படங்களை எடுத்துக்கொண்டார். மேலும், புதிய தளபதி அவர்கள் தொடர்ந்து படையனினருக்கான உரையின் போது தனது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நினைவூட்டினார்.

அன்றைய நிகழ்ச்சி நிரலின் முடிவில் சிப்பாயிகளின் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிலையினருடனான தேநீரின் விருந்துபசாரத்தின் போது அவர் படையினருடன் உரையாடினார். படைப்பிரிவு தளபதிகள், வட மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.