22nd July 2023 19:17:30 Hours
வியாழன் (ஜூலை 20) காலை பெலிஹுலோயாவில் உள்ள சீல சம ஹித யோகாஷ்ரமயவின் பிரதமகுரு வண.பலாங்கொட ரத தேர அவர்களால் நடாத்தப்பட்ட ‘சித்நிவா ஹமா என அமா புது குண சுவந்த’ தர்ம பிரசங்கம் எனும் கருப்பொருளில் இடம்பெற்ற தர்ம பிரசங்கத்தை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் படையினர் செவிமடுத்தனர்.
இராணுவத் தளபதி வழங்கிய வழிகாட்டுதலின்படி, மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச் ஆர் ஆர் வி எம் என் டி கே பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ அவர்களின் கட்டளையின் கீழ் தர்ம பிரசங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரசங்கத்தின் முடிவில் பிக்குமார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்பீபீ தசநாயக்க மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.