20th July 2023 21:07:58 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் எம்சீஎஸ்கே சேனாரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை (19) சம்பிரதாய நிகழ்வின் போது பதவியேற்றார். பிரிகேடியர் எம்சீஎஸ்கே சேனாரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ புதிய அலுவலகத்தை வந்தடைந்ததும் தனது பதவியை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் யுஎஸ்என்கே பெரேரா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்களின் பின்னர் இப் பதவியேற்றதுடன், அவரது பதவியேற்பில் தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நியமனத்திற்கு முன்னர், அவர் புத்தல இராணுவப் போர்க் கல்லூரியில் பிரதி தளபதியாக பணியாற்றினார்.