Header

Sri Lanka Army

Defender of the Nation

17th July 2023 21:40:20 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 16 வது படைத் தளபதியாக ஞாயிற்றுக்கிழமை (16) சமய ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இவர் யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாகவும் கடமையாற்றுகின்றார்.

புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் எல்எச்சிஆர் சிறிவர்தன ஆர்எஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நிலை தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்கள் சிரேஷ்ட அதிகாரி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை அணிவகுப்பு மரியாதைக்கு அழைத்து சென்றார்.

பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி நினைவுத் தூபியில் உயிரிழந்த இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மறைந்த போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வின் நினைவாக குழு படம் எடுத்தல் மரக்கன்று நட்டுதல் என்பன இடம் பெற்றது. பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது புதிய அலுவலகத்தில் மங்கள விளக்கேற்றி, உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமையை பொறுப்பேற்று கொண்டார்.

நிகழ்வின் இறுதியில் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திற்கு முன் படையினருக்கு உரையாற்றினார்.

இவர் இராணுவத்தில் இருந்து மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் ஓய்வு பெற்றதனை அடுத்து நியமிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்து கொண்டனர்.