14th July 2023 21:23:29 Hours
கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பயிற்சிப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக இராணுவத் தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஜூலை 13) சமய நிகழ்வுகளுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் சுபவேளையில் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதனை குறிக்கும் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 59 காலாட் படைபிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமையை அடுத்து பிரிகேடியர் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி இந்த நியமனத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கு முன்னர் இராணுவ தலைமையகத்தில் உதவி இராணுவ செயலாளராக பணியாற்றினார்.
அவர் பதவியேற்பின் பின்னர் அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றியதுடன் தனது எதிர்காலத்தில் இலக்கு குறித்து கருத்து தெரிவித்தார். மேலும் அவர் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடப்ளியுடப்ளியுடப்ளியுஎம்சிபி விக்கிரமசிங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பிஎஸ்சி அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.
பயிற்சி பணிப்பகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.