07th July 2023 21:00:14 Hours
கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக வளாகத்தின் நுழைவாயிலில் சமய சடங்குகள் மற்றும் அனுசரிப்புகளுக்கு மத்தியில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் வியாழக்கிழமை (06) பிரதான காவலர் அறை அடிக்கல்லை நாட்டினார்.
இந் நிகழ்ச்சி மகா சங்கத்தினரின் 'செத்பிரித்' பாராயணங்களுடன் தொடங்கியதுடன் சுப வேளையில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையக வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் உத்தேச 'பி' காவலர் அறைக்கான அடிக்கல் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியினால் வைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கிய வளாகம் இத் திட்டத்தின் மூலம் புத்துணர்வைப் பெருகிறது.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கட்டளை அதிகாரிகள் மற்றும் அவர்களின் சிப்பாய்களுடன் இணைந்து மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்குவார்கள். இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியின் வழிகாட்டுதலின்படி ஏனைய காவலர் அறைகளும் விரைவில் தலைமையகத்தில் அமைக்கப்படும்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.