06th July 2023 21:56:58 Hours
கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் பீசிஎல் குணவர்தன ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய தளபதியாக வியாழக்கிழமை (ஜூலை 6) இராணுவத் தலைமையகத்தில் பதவியேற்றார்.
அவர் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந் நியமனத்திற்கு முன்னதாக அவர் முதலாம் படையில் பிரிகேடியர் பொதுப்பணியாக பணியாற்றினார்.
இந் நிகழ்வில் பணிப்பாகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். அவர் இப்போது மன்னாரில் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஜிஏடபிள்யூ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு பிறகு பதவியேற்றுள்ளார்.