05th July 2023 19:20:00 Hours
இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்கே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கந்தளாய் பொறியியல் படையணிக்கு தனது முதல் விஜயத்தை செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து பொறியியல் பிரிகேட் பதில் தளபதி கேணல் எச்எஸ்கே ஜயசிங்க ஆர்எஸ்பீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.
அன்றைய நினைவின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டதுடன் படையினருக்கு உரையாற்றும் முன் பிரிகேட் படையினருடன் குழுபடமும் எடுத்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அனைத்து நிலையினருடன் தேநீர் அருந்தியதுடன் படையினர்களுடன் உரையாடினார். பின்னர் அதிதிகள் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்குபற்றினர்.