Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2023 20:47:07 Hours

இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 19 வது ஆண்டு நிறைவு

ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒரே பயிற்சி நிலையமான குக்குலேகங்காவில் உள்ள இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 19வது ஆண்டு நிறைவை ஜூன் 12 இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவன வளாகத்தில் பல நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டது.

கொஸ்குலான விகாரையில் விசேட சிரமதான பணியினை முன்னெடுத்தப் படையினர் விகாரையில் வசிக்கும் புதிய பிக்குகளின் பாவனைக்காக சில எழுதுபொருட்களையும் தானமாக வழங்கினர். ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவன மற்றும் பாடநெறியில் பங்கேற்பாளர்களுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் நோக்கத்துடன், ஆண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக மென்பந்து கிரிக்கெட் போட்டி ஒன்றும் நடத்தப்பட்டது.

அதற்கமைய ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதி பிரிகேடியர் சிஏ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களுக்கு முறையான பாதுகாவலர் அறிக்கை மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், 19 வது ஆண்டு நினைவாக வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது. குழு படம் எடுத்தல், ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவன தளபதியின் உரை மற்றும் அனைத்து நிலையினருக்குமான மதிய உணவு வழங்கல் போன்றன நிகழ்வுகளும் இடம் பெற்றன.

ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தளபதி பிரிகேடியர் சிஎ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ, ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் தலைமைப் பயிற்றுவிப்பாளர், லெப்டினன்ட் கேணல் ஜிஎச்எ ஹேவாகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ உட்பட ஐநா இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.