26th June 2023 07:33:25 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 12 வது காலாட் படைபிரிவின் படையினர் 15 - 21 ஜூன் யால தேசிய பூங்கா மற்றும் கடகமுவ நுழைவாயிலின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கடக்கும் போது பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி உபசரித்தனர்.
கதிர்காம ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமே புதன்கிழமை (21) அப்பகுதியில் சேவையாற்றும் இராணுவப் படையினரின் நெருக்கமான ஒத்துழைப்புடன் இலவச உணவு வழங்குவதற்கு அனுசரணை வழங்கினார். 11,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யுஆர்எம்எம் ரத்நாயக்க ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் வழங்கிய வழிகாட்டுதலின்படி 11 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 12 வது காலாட் படைப்பிரிவு படையினர், உணவு சமைப்பதற்கான ஆள்பலத்தை வழங்கினர்.
இத்திட்டத்தை 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீபீஏ பெரேரா எச்டீஎம்சி பீஎஸ்சி, பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஒருங்கிணைத்தனர்.