24th June 2023 18:20:15 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் 06 அதிகாரிகள் மற்றும் 205 சிப்பாய்கள் இணைந்து செவ்வாய்கிழமை (ஜூன் 13) நிலாவெளி கரையோரப் பகுதியை மாசுபடுத்தும் பொருட்களிலிருந்து விடுவிப்பதற்காக கடற்கரையை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுத்தனர.
பிரபலமான கடற்கரை ஓய்வு விடுதிகளை கொண்ட இப் பகுதி கடந்த சில வாரங்களாக மழை நீர் அப்பகுதிகளை ஆக்கிரமித்ததால் கழிவுகள் மற்றும் மாசுகளால் நிரம்பியிருந்தது.
இந்த திட்டம் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதுடன், 221 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஏகே பீரிஸ் ஆர்எஸ்பீ மற்றும் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இலங்கை கடற்படையின் 02 அதிகாரிகள் மற்றும் 30 சிப்பாய்கள், 28 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஐவரும் இந்த சமூகம் சார்ந்த திட்டத்திற்காக இராணுவத்துடன் கைகோர்த்துக் கொண்டனர்.