24th June 2023 18:00:15 Hours
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யுடி. விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் கருத்தியல் வழிகாட்டலுக்கமைய பொறியியல் சேவை பணிப்பகத்தினால் நீர் சுத்திகரிப்புக்காக ஹபரகட பொறியியல் சேவை மையப் பணிமனையினால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது.
கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் படையினரின் நலனுக்காக நிறுவப்பட்ட இந்த புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் வியாழக்கிழமை (ஜூன் 22) கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களினால் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது