22nd June 2023 21:43:59 Hours
இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை (ஜூன் 14) அன்று இராணுவத் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பங்குபற்றலின் இராணுவத் தலைமையகத்தின் அதிகாரிகள் ‘'கணக்காய்வு பிழைகளைக் குறைத்தல்' பற்றிய செயலமர்வில் பங்குபற்றினர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க பாதிடூ மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களினால் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பிரதி கணக்காய்வாளர் நாயகம் திரு எஸ்டிபி ரத்நாயக்க அவர்களால் இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டதுடன், பிரதி பதவி நிலைப்பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவத் தலைமையகத்தின் பிரதான பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.
ஸூம் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு இராணுவ நிறுவனங்களில் இருந்தும் ஏராளமான அதிகாரிகள் இச் செயலமர்வில் பங்குபற்றினர்.