20th June 2023 20:19:23 Hours
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சோக் பகதூர் தாகல் அவர்கள் செவ்வாய்க்கிழமை (06) ஜூன் 2023 அன்று லெபனானின் நகோராவில் உள்ள இலங்கை பாதுகாப்பு படை குழுவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
வருகை தந்த லெபனான் ஐநா இடைக்காலப் படையின் பிரதி படைத் தளபதியை இலங்கை இராணுவத்தின் லெப்டினன்ட் கேணல் டிபீஎல்டி களுஅக்கல ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவினர் தளபதி அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
இலங்கை பாதுகாப்பு படை குழு படையினருக்கு உரையாற்றியதுடன் 'ஸ்ரீ ஹவுஸில்' அனைத்து நிலையினருக்கான மதிய உணவிலும் கலந்துக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்திற்கு சொந்தமான மோப்ப நாய்களின் திறன்கள் மற்றும் செயலூக்கமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ‘நாய்களின் கண்காட்சி’ ஒன்றும் வருகை தந்த பிரிகேடியர் ஜெனரல் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது.
வெளியேறுவதற்கு முன்னர், பிரதிப் படைத் தளபதி இலங்கை பாதுகாப்பு படை குழு படையினருக்கு தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், தனது வருகையின் நினைவுகளை விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதிவிட்டார்.
14 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவின் அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.