20th June 2023 20:00:23 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் பீஆர்பிஏ பண்டார ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ இசைக்குழு மற்றும் நுன்கலை பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக வியாழக்கிழமை (ஜூன் 15) இரத்மலானையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பணிப்பகத்தின் பல அதிகாரிகள் முன்னிலையில் அதிகாரபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவர் கடமையை பொறுப்பேற்றார்.
பின்னர்,அவர் பணிப்பகத்தின் பணியாளர்களுக்கு உரையாடுவதற்கு முன்பு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.
பிரிகேடியர் டிஎம் ஹெட்டியாராச்சி ஆர்எஸ்பீ யுஎஸ்பீ அவர்கள் இலங்கை இராணுவ சேவையை நிறைவு செய்தமையை அடுத்து இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.