19th June 2023 19:20:06 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அண்மையில் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக வியாழக்கிழமை (ஜூன் 15) யாழ்ப்பாணம் மிருசுவில் 52 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
யாழ்ப்பாணத் தளபதியை 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யாம்பத் ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். பின்னர் காலாட் படைப்பிரிவின் வகிபங்கு, பணிகள், நடப்பு விவகாரங்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து யாழ் தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார்.
பின்னர் அதே நாளில், அவர் முறையே வல்லை மற்றும் அல்லரை பகுதிகளில் அமைந்துள்ள 521 மற்றும் 523 வது காலாட் பிரிகேட்களுக்கும் விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது 52 காலாட் படைபிரிவு தலைமையகத்தின் அனைத்து பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் உடனிருந்தனர்.