18th June 2023 16:40:57 Hours
கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டப்ளியிபீ ஆர்எஸ்பீ அவர்கள் விவசாய மற்றும் கால்நடைப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக வெள்ளிக்கிழமை (ஜூன் 16) பனாகொடை இராணுவ வளாகத்தில் நடைபெற்ற சுருக்கமான சமய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர், புதிய நியமனத்தை சுப வேளையில் ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், ஒரு முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.
பிரிகேடியர் ஏகே ராஜபக்ச ஆர்எஸ்பீ அவர்கள் தற்போது வட மத்திய முன்னரங்கு பராமரிப்புப் பகுதி தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பணிப்பாளர் பிரிகேடியர் பிஎன் மதநாயக்க ஆர்டப்ளியு ஆர்எஸ்பீ இந்த நியமனத்திற்கு முன்னர் ராகம ரணவிரு செவனவில் தளபதியாக கடமையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.