18th June 2023 16:50:12 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ விஎஸ்டவி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள், செவ்வாய்க்கிழமை (ஜூன் 13) கோப்பாய் 51 வது காலாட் படைபிரிவு தலைமையகத்திற்கு விஜயம் செய்தார்.
51 வது காலாட் படைபிரிவின் தளபதி தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியுபி வெலகெதர ஆர்எஸ்பீ விஎஸ்டவி யுஎஸ்பீ என்டிசி அவர்களால் அன்புடன் வரவேற்கப்படுவதற்கு முன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றியதுடன் தனது நோக்கத்தை முன்வைத்தார்.
அன்றைய தினத்திற்கான நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன் படைப்பிரிவு பணியாளர்களுடன் குழு படமும் எடுத்துக் கொண்டார். பின்னர் படைப்பரிவு தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகளிடம் படைப்பிரிவின் வகிபங்கு மற்றும் பணிகள் மற்றும் அதன் பொறுப்புகள் பற்றிய சுருக்கத்தை பெற்றார். அதிகாரிகள் உணவறையில் இடம்பெற்ற தேனீர் விருந்தின் போது அதிகாரிகளுடன் உரையாடினார்.
அவர் புறப்படுவதற்கு முன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது சில எண்ணங்களை பதிவிட்டார். அன்றைய நிகழ்ச்சி நிரலின் இறுதிப் பகுதியாக, காங்கேசன்துறை பகுதியில் உள்ள 51 ஆவது காலாட்படை பிரிவின் கீழ் உள்ள பல முகாம்களுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் விஜயம் செய்தார்.
இந்த விஜயத்துடன் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர்.