Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2023 19:30:34 Hours

இலங்கை சிங்கப் படையணி பிரிகேடியருக்கு பிரியாவிடை

34 வருட அர்ப்பணிப்பும் பெறுமதியுமான சேவையை நிறைவு செய்த இலங்கை சிங்கப் படையணியின் ஓய்வுபெறும் பிரிகேடியர் எச்.எம்.எல்.கே. அமுனுகமவுக்கு 14 ஜூன் 2023 அன்று இலங்கை சிங்கப் படையணி தலைமையக படையினரால் பொருத்தமான வைபவத்தின் போது அவருக்கு முறையான பிரியாவிடை வழங்கப்பட்டது.

அதன்படி, பிரியாவிடை தொடர்பான சம்பிரதாயங்களுக்கு அமைவாக வெளியேறும் பிரிகேடியருக்கு இராணுவ மரபுகளுக்கு இணங்க நுழைவாயிலில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் பின்னர் அவர் சிங்கப் படையணி போர் வீரர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்துவதற்கு முன்பு அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

அதன் பின்னர் பிரிகேடியர் எச்.எம்.எல்.கே அமுனுகம பிரதான கேட்போர் கூடத்தில் அனைத்து நிலையினருடன் தேனீர் விருந்தில் கலந்து கொண்டதுடன் குழு படமும் எடுத்துக்கொண்டார். மேலும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் வழங்கல் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களினால் வெளியேறும் சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது அர்ப்பணிப்பு மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு அடையாளமாக நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

இலங்கை சிங்கப் படையணியின் சேவை வனிதையர் கிளையின் தலைவி திருமதி ஒமிலா ஜயவர்தனவினால் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் துணைவியார் திருமதி குமுது ஹேரத்துக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. பிரிகேடியர் எச்எம்எல்கே அமுனுகம அவர்கள் கூடியிருந்த அனைத்து அதிகாரிகளுடனும் உரையாடியதுடன், சிங்க குடும்பத்தின் அங்கத்தவர் என்ற ரீதியில் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அனைவரும் வழங்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.

சிரேஸ்ட அதிகாரிகள், பேரவை உறுப்பினர்கள், பணிநிலை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் உள்ளிட்டோர் அன்றைய நிகழ்வுகளில் பங்கேற்றனர். அன்றைய திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி, மதிய உணவு விருந்துடன் நிறைவடைந்தது.