Header

Sri Lanka Army

Defender of the Nation

14th June 2023 18:30:24 Hours

பொறியியல் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவப் பொறியியல் படைப்பிரிவின் 4 வது தளபதியாக வியாழன் (ஜூன் 8) கடமை பொறுப்பேற்றார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, புதிய தளபதி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதி அவர்கள் படையினர்களுக்கு உரையாற்றியதுடன், அவருக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இப்படைப்பிரிவின் மேம்பாட்டிற்காக இதுவரை படைப்பிரிவு தளபதிகள் வழங்கிய பங்களிப்பையும் அவர் குறிப்பிட்டு, அவர்களின் முயற்சிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், நமது தாய் நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த வீரம் மிக்க அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தினார். தனது உரையின் போது, நிறுவன இலக்குகளை அடையும் போது அர்ப்பணிப்பு, பொறுப்பு, குழுப்பணி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

இந் நிகழ்வில் பொது பொறியியல் பிரிகேட்டின் தளபதி பிரிகேடியர் டிசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, (கண்காணிப்பு) ஆலை பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எச்எஸ்கே ஜயசிங்க ஆர்எஸ்பீ, பிரதி நிலைய தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படைப்பிரிவு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேஜர் ஜெனரல் எஸ்எ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இதற்கு முன்னர் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக நியமனம் வகித்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.