13th February 2023 21:25:25 Hours
இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியாக அண்மையில் நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் 2023 பெப்ரவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் இயந்திரவியல் காலாட் படையணி பயிற்சி நிலையம், 1 வது இயந்திரவியல் காலாட் படையணி மற்றும் 2 வது இயந்திரவியல் காலாட் படையணி ஆகியவற்றுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இவ் விஜயத்தின் போது வருகை தந்த படைத் தளபதி அவர்களுக்கு அனைத்து படையணிகள் மற்றும் பயிற்சி நிலையத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி படையினரிடம் உரையாற்றியதுடன், அவர்களின் நிர்வாக விடயங்களையும் கேட்டறிந்து கொண்டதுடன், தொடர்ந்து அந்தந்த அதிகாரிகளுடன் இணைந்து முகாம் வளாகங்களை பார்வையிட்டார். அந் நாளின் நினைவாக முகாம் வளாகங்களில் மரக்கன்றுகளையும் படைத்தளபதி நாட்டினார்.
இயந்திரவியல் காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரவீந்திர பாலசூரிய, இயந்திரவியல் காலாட் படையணி நிலையத் தளபதி பிரிகேடியர் அனுர அபேயசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், இயந்திரவியல் காலாட் படையணி அதிகாரிகள் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.தற்போது மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்கள் கடமையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.