17th February 2023 21:29:47 Hours
அண்மையில் நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் பிரியந்த தசநாயக்க அவர்களுக்கு பனாகொடை இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 10) வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
இலங்கை சமிக்ஞை படையணி தலைமையக நிலைய தளபதி கேணல் கசுன் அதிகாரி அவர்கள் அன்றைய பிரதம அதிதியை இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய வரவேற்றதனை தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரதம அதிதி வண்ணமயமான அணிவகுப்பு மரியாதையுடன் கௌரவிக்கப்படுவதற்கு முன்னர் போர்வீரர்கள் நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சிரேஷ்ட அதிகாரிகள் பிரதம அதிதியுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்தின் போது அதிகாரிகளின் உணவகத்திலிருந்த அதிகாரிகளுடன் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள சிரேஷ்ட அதிகாரி சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் இலங்கை சமிக்ஞை படையணி படைத் தளபதியும் பிரதம சமிக்ஞை அதிகாரியுமான மேஜர் ஜெனரல் லலித்ஹேரத் அவர்களுக்கு தளபதி அலுவலகத்தில் மரியாதை செலுத்தினார்.
அன்றைய நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்வதற்கு முன்னதாக பிரதம அதிதி அனைத்து அதிகாரிகளுடன் அதிகாரிகளின் உணவகத்தில் மதிய விருந்துபசாரத்தில் இணைந்துகொண்டதுடன் அங்கு அவருக்கு இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்திற்கு விஜயம் செய்ததற்காக அவருக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.