04th March 2023 21:57:33 Hours
கௌரவ. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வியாழக்கிழமை (மார்ச் 02) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களை சந்தித்தார்.
அன்பான வரவேற்பிற்குப் பிறகு சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடனான சுமுகமான உரையாடலின் போது பாதுகாப்பு பிரச்சினைகள், சட்ட ஒழுங்கு, சமூக நல திட்டங்கள், தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் மற்றும் சிவில் பிரச்சினைகள் போன்றவற்றின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடினார்.அவர் புறப்படுவதற்கு முன் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களை குறிப்பிட்டு சென்றார்.