06th March 2023 20:50:27 Hours
கெமுணு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் சேனக கஸ்தூரி முதலி அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் தளபதியாக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி புதுக்குடியிருப்பு 68 வது படைப்பிரிவு தலைமையகத்தில் சமய ஆசீர்வாதங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
68 வது படைப்பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தளபதியை பணிநிலை அதிகாரிகள் அன்புடன் வரவேற்றதன் பின்னர், நுழைவாயிலில் காவலர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
பின்னர், புதிய தளபதி தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான அடையாளமாக அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, தளபதி அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களிடம் அவரது எதிர்கால நோக்கக்கூற்றினை முன்வைத்தார். இந்த நிகழ்வின் போது பிரிகேட் தளபதிகள், 68 வது காலாட் படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் கலந்துகொண்டனர்.