07th March 2023 19:30:45 Hours
கிளிநொச்சியில் அமைந்துள்ள 57 வது காலாட் படைப்பிரிவின் 16 வது ஆண்டு விழாவை மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமல்பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பெப்ரவரி 24-26 திகதிகளில் கொண்டாடப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக வெள்ளிக்கிழமை (24) தர்ம பிரசங்கத்தில் படையினர் ஏற்பாடு செய்திருந்துடன் அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (25) முகாம் வளாகத்தில் 16 மகா சங்க உறுப்பினர்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆண்டு நிறைவு நாளில் (26) இராணுவ சம்பிரதாயங்களை ஆரம்பித்து வைத்த தளபதியை படைப்பிரிவு பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான மதிய விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர் தளபதிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 57 வது காலாட் படைப்பிரிவின் கட்டளையின் கீழ் உள்ள பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வுகளுடன் இணைந்திருந்தனர்.