10th March 2023 18:48:45 Hours
கெமுனு ஹேவா படையணியின் பிரிகேடியர் பாத்திய மதநாயக்க, அவர்கள் ராகம ரணவிரு செவனவின் புதிய தளபதியாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 07) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
நுழைவாயிலில் அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை அளிக்கப்பட்டது, பின்னர் அந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் வளாகத்தில் ஒரு மரக்கன்று நடுவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ராகம 'ரணவிரு செவன'வின் பல அதிகாரிகள் முன்னிலையில் மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை இட்டு தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
தனது கடமைகளை பொறுப்பேற்றவுடன், பிரிகேடியர் பாத்திய மதநாயக்க, அவர்கள் படையினருக்கு உரையாற்றியதுடன், தங்கியிறுப்போரின் மருத்துவ நிலைமைகள் மற்றும் வழங்கப்படும் வசதிகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இதற்கு முன் இப்பதவியில் கடமையாற்றி பிரிகேடியர் ஜீவன் குணதிலக்க அவர்கள் இப்போது விஜபாகு காலாட் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.