15th March 2023 19:41:16 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 மார்ச் 14 அன்று மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு பண்டாரவளை அம்பேகொட சிறிசங்கபோ சிறுவர் இல்லத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.
மேலும், தியத்தலாவை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க, படையினரின் ஆதரவுடன் வைத்தியசாலை வளாகத்திதை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை (14) இராணுவ சம்பிரதாயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, 23 வது கஜபா படையணியின் சிப்பாய்களால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதிக்கு வழங்கப்பட்டது.