20th March 2023 20:20:57 Hours
வவுனியா மூண்டுமுறிப்பு விஷேட படையணி பிரிகேட் தலைமையகத்திற்கு திங்கட்கிழமை (2023 மார்ச் 13) முதலாம் படையணித் தளபதியும், பொதுப்பணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்கள் தனது விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த தளபதிக்கு விஷேட படையணி பிரிகேடின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. விஷேட படையணி பிரிகேட் தளபதி பிரிகேடியர் கமல் அமரசிங்க அவர்கள் வருகை தந்த முதலாம் படையணி தளபதிக்கு விஷேட படையணி பிரிகேடின் செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.தனது முதல் வருகையின் நினைவம்சமாக பிரிகேட் வளாகத்தில் மரக்கன்றினை நடுவதற்கு முதலாம் படையணி தளபதி அழைக்கப்பட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியில், முதலாம் படையணி தளபதி, கோப்ரல்களின் உணவகத்தில் படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து நிலையினருடனும் தேநீர் உபசாரத்திலும் கலந்து கொண்டதுடன், தனது மதிப்புமிக்க அனுபவங்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.இறுதியாக, வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, அதிதி பதிவேட்டில் தனது பாராட்டுக்களையும், எண்ணங்களையும் பதிவிட்டார்.