Header

Sri Lanka Army

Defender of the Nation

25th March 2023 21:45:58 Hours

நாடளாவிய ரீதியில் படையினரால் நெல் அறுவடை

மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் படையினர் கடந்த 'பெரும்' போகத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்டிருந்த நெல் அறுவடையை சனிக்கிழமை (18) மேற்கொண்டனர்.

பாரம்பரிய சடங்குகளுக்கு மத்தியில், 'அலுத் சஹல் மங்கல்லய' அறுவடையை மாதுருஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலை தளபதியின் முன்னிலையில் முன்னெடுத்தனர்.

இதேவேளை, திங்கட்கிழமை (பெப்ரவரி 20) 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக ரணசிங்க அவர்களின் முன்னிலையில் கல்குளம் 62 வது காலாட் படைப்பிரிவின் படையினர், தமது வளாகத்தில் 05 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்தனர்.

மேலும் இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படையினர் பனாலுவை இராணுவப் பொதுச் சேவைப் படையணி பண்ணையில் 5 ஏக்கர் நெற்பயிர்களில் அறுவடையை வெள்ளிக்கிழமை (24) இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்களின் வழிகாட்டலின் கீழ் அறுவடை செய்தனர்.

1 வது இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே டபிள்யூ கே ஏ பீ வன்னியாராச்சி, அவர்களும் அந்த இடத்தில் இருந்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மேற்கூறிய அறுவடை திட்டங்களுடன் இணைந்திருந்தனர்.