27th March 2023 23:22:02 Hours
இராணுவ வளங்கல் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் மார்ச் 16 அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த படைத்தளபதி அவர்களை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி பிரிகேடியர் சஞ்சய பத்திரன அன்புடன் வரவேற்றதுடன் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பணிநிலை அதிகாரிகளுடன் வளங்கல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இவ் விஜயத்தின் போது இராணுவ வளங்கல் தளபதி இராணுவ வளங்கல் தொடர்பான முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை வழங்கியதுடன் வளங்கல் விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
அமர்வின் முடிவில், இராணுவ வளங்கல் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.